ப்ளாக்க ஆரம்பித்தாகிவிட்டப்பறம் (?!) என்ன எழுதலாம்னு யோசிக்க.. யோசிக்க... (என்னாது? ரூம் போட்டா...? நானெல்லாம் ரூம் போட்ரதுக்கே யோசிப்பவன்.) சரி, எப்படி இப்படி வந்தோம்னு எழுதலாம்னு முடிவிட்டேன் (முடிவு + விட்டேன்).
அதுக்குள்ளேவா... னு கேக்கறீங்க? பின்னே, எப்படிப் போனேன்னு தெரியாமெலயே நீங்க என்னைப் போக வச்சிட்டா.. அதுக்குதான்!
அதுவொரு பின்மதியப்பொழுது. சாப்பிட்டப்பிறகு, மூளை சற்றே அசரத்தொடங்கிய நேரம். அலுவலக விஷயங்களினி மங்கலாகும் என்றுதெளிந்து, கோட்டின் மேல் (online) ஏதாவுது தேடலாமென்று கணினியை துயிலெழுப்பினேன்.
ஒரு தெளிவு இங்கு. எனக்கு எப்போதுமே மூளைக்கு சேர வேண்டியவையெல்லாம் அயல் மொழியிலும் (உம்), மனதுக்கு சேர வேண்டியவை தாய்மொழியிலும் படிக்க வேண்டும்.
அதன்படி, கூகிளிடம் "டமில் சைட்ஸ்" யென தேடப்பணித்தேன். வந்தவைகளில் சிலபலவற்றை நோக்கி மற்றும் நீக்கியதில், உயிர்மையில் சென்றமர்ந்தேன்.
தொடரும்...
Monday, December 21, 2009
Wednesday, December 9, 2009
வணக்கம்!
சில மாதங்களாக வலைப்பூக்களை முகர்ந்ததால் வந்த விளைவுதான் இந்த முயற்சி. இதனிலிருந்து வரப்போவுது புது மணமா? இல்லை... இதனால் போகப்போவுது என் மானமா? - என்பதை உங்களோடு நானும் பார்க்க ஆவலாய் உள்ளேன்.
Subscribe to:
Posts (Atom)